; //]]>
; //]]>

ஊக்கம் தருபவர்கள்

Showing posts with label இந்து. Show all posts

ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்

“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 18:10)
...கர்த்தர், மனிதனை இந்த பூமியிலே சிருஷ்டிப்பதற்கு முன்பாக, கர்த்தர் தேவ தூதர்களை சிருஷ்டித்தார். அவர்களுடைய எண்ணிக்கை ஆயிரமாயிரமாயிருந்தது. அவர்கள் நம்மைப்போல மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்களல்ல. தேவனுடைய ஜோதிப் பிரகாசத்திலிருந்து, அதாவது அழியாத மகிமையுள்ளவர்களாக, சிருஷ்டிக்கப் பட்டார்கள். ஆனால் தேவன், தேவதூதர்களுக்கு வந்த பெருமை மனிதனுக்குள்ளும் வந்துவிடாதபடி, தள்ளப்பட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை யாக மனுஷனை மண்ணிலிருந்து, உண்டாக்கினார்.
சங்கீதக்காரன் சொல்லுகிறார், “நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், கனத்தினாலும், அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:5,6).
மட்டுமல்ல, யார் யார் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார் களோ, அவர்களுக்கு தேவதூதர்களையெல்லாம் பணிவிடை ஆவிகளாகத் (வேலைக்காரர்களாக) தந்தருளுகிறார் (எபி. 1:14). அதன்படி நம்மை தேவ தூதர்களுக்கு மேலாக உயர்த்திவிட்டார். தேவதூதர்கள், நமக்குக் கொடுக்கப்படுகிற பணிவிடை ஆவிகள். மறுபடியும் பிறந்தவர்கள் ஏழைகளாயிருந்தாலும், படிப்பறிவில்லாதவர்களாயிருந்தாலும், அவர்களை யாரும் அற்பமாய் எண்ணிவிட முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும், கர்த்தர் தேவ தூதர்களை நியமித்திருக்கிறார். அவர்கள் பரலோகத்திலே தேவனை தரிசித்து, அவர்களுக்காக, உத்தரவாதம் செய்கிறார்கள்.
ஒரு ஐசுவரியவான் வீட்டு வாசலருகே, லாசரு என்ற மனிதன், நாய்க்குக் கிடைக்கக்கூடிய உணவு கூட கிடைக்காமல், தவித்தான். ஆனாலும் அவன் மரித்தபோது, தேவதூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால் ஐசுவரியவானோ, பாவியாயிருந்தபடியால், அவனுக்கு ஆபிரகாமின் மடியும் கிடைக்கவில்லை. தேவதூதரின் பணியும் கிடைக்கவில்லை. இதனால் வேதம் சொல்லுகிறது, “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” (எபி. 13:2).
இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு தேவபிள்ளைக்கும், ஒரு தேவதூதன் உண்டு. உங்கள் ஊழியத்துக்கு ஏற்ற விதத்திலே, நூற்றுக்கு அதிபதியைப்போல, நூறு தேவ தூதர்களையோ, அல்லது ஆயிரம் தேவதூதர்களையோ, கர்த்தர் தருவதுண்டு. தேவபிள்ளைகளை பாதுகாக்கிற சாதாரண ஊழியம் செய்கிற தேவதூதர்கள், எப்பொழுதும் பிதாவின் முகத்தை பரலோகத்தில் தரிசிப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால், உன்னதமான ஆவிக்குரிய ஜீவியம் செய்கிறதான, தேவபிள்ளைகள், எவ்வளவு சமீபமாக பிதாவினுடைய முகத்தை தரிசிப்பார்கள்!
இந்த உலகத்தில் நீங்கள், எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக தேவனாகிய கர்த்தரை நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அதைப் போலவே, பரலோகத்திலும் அவருடைய முகத்தை மிக அருகிலே தரிசிப்பீர்கள். ஆகவே, தேவனுடைய இருதயத்துக்கு, மிகவும் நெருங்கி ஜீவிக்க பிரயாசப்படுங்கள்.
http://appamonline.com/2016/11/24/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
Share: 

எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ?

ஏன்  எனது செபத்திற்கு இவ்வளவு காலம் பதில் கிடைக்கவில்லை ? ஒருவேளை நான் பெரும் பாவம் செதுய்து விட்டேனோ என்று புலம்புகின்றீர்களா ? கவலையை இன்றே விட்டு விடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்

வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க


வேதத்தை  காட்சிகளுடன்  விரைவில் கற்க  முடியும் உலகில் பல மொழிகளில் காணபடுகிறது  அத்துடன் பல வேத வல்லுனர்களின் விளக்ங்களை  காணலாம் 
வேதத்தை  காட்சிகளுடன்  விரைவில் கற்க 

வேத வல்லுனர்களின் விளக்ங்கள் 

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
கத்தரே  உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கிறார்
அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகிறார்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

பிடித்து கொள் ஜீவ வசனம் பிரகாசி கிறிஸ்து ஜேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில் நீதானே நட்சத்திரம்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

அவமானம் நிந்தை எல்லாம் அநுதின உணவு போல 
பழி சொல் எதிர்ப்பு எல்லாம் பெலன் தரும் ஊட்ட சத்து 

கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல

கிறிஸ்து ஒரு நொடி பொழுதில் பல்லாயிரகணக்கானவரின்  மனதை மாற்ற வல்லவராய் இருக்கிறார் 

தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ஊறியவர் பாகம் 02

சிறைகள் கண்டவர். தனது வாழ்நாளில் இயேசுவை முகம் முகமாய் தரிசித்தவர் இயேசுவிற்க்காக பல வேதனைகள் கண்டவர் இவருடைய கண்ணீர் நிறைந்த சாட்சி இந்து தீவிர வாதிகளால் பல தடவை கடுமையாய் தாக்க பட்டவர் மனித தெய்வமாக வழிபட்ட சாயி பவா இவரை கண்டு ஓட்டம் பிடித்தவர் 

தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ஊறியவர் பாகம் 01

தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ஊறியவர் பல சிறைகள் கண்டவர். தனது வாழ்நாளில் இயேசுவை முகம் முகமாய் தரிசித்தவர் இயேசுவிற்க்காக பல வேதனைகள் கண்டவர் இவருடைய கண்ணீர் நிறைந்த சாட்சி இந்து தீவிர வாதிகளால் பல தடவை கடுமையாய் தாக்க பட்டவர் 


தீபாவளி செயற்கை கோள் வரைபடமும் நிரூபணம் ஆகும் வசனம் !

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை வெளியிட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று ‌எடுக்கப்பட்ட படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை‌ ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன.இது அண்மைய செய்தி .

 இப் படத்தின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதபட்ட வேத வசனம் உண்மை விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.  மனிதக்  கைகளால்  ஆன செயற்கை கோள்வாயிலாக    இவ்வளவு  செய்ய முடியும் போது இறைவனுக்கு ''படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.''  என்ற வசனம் உண்மை என்பது நிரூபணம் ஆகின்றது 


எபிரே. 4:12-13

சகோதர,சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீரதூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். மும் 
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்